இவ்வுலகில் நான் முதன் முதலாய்
கண்விழித்தபோது புன்னகைத்தாய்.....
தவழ்ந்த போது துள்ளிக் குதித்தாய்......
விழுந்த போது தாவிப் பிடித்தாய் ..
அப்பா என அழைத்தபோது அளவில்லா ஆனந்தம் கொண்டாய்
திருடிய போது தண்டித்தாய்..
காய்ச்சலில் படுத்தபோது கண்கலங்கினாய் ...
உன் தோள் தொட்டபோது தோழன் ஆனாய்....
காதல் என்ற போது கை கொடுத்து வாழ்த்தினாய்....
தேர்வில் தோற்ற போது தைரியம் தந்தாய்....
படிப்பை முடித்தபோது பாதியாகி போனாய் ...
வேலையில் சேர்ந்தபோது வயதாகி போனாயே அப்பா ...
இனி நீ என் குழந்தை ...
இவ்வுலகில் உள்ளவரை ....
மீசைக்கார அப்பா ...
நீ ரொம்ப பாசக்காரரப்பா ........
No comments:
Post a Comment