முன்னேறி வா.. மாணவா..

முன்னேறி வா..  மாணவா..
முன்னோக்கியே
நீ வெல்ல வா..

கல்லாயினும்
காடாயினும்
முன்னோக்கியே
வா.. வல்லவா..

இந்த உலகை நீயும் ஆள
போகாத உயரம் போக
உன்னை முதலில் நீயும்
அறிந்து கொள்ளுவாய்..
சுயமறிவதே உந்தன்
மகாசக்தி..

தீமை உன்னை
ஆட்டியும் படைக்கும்
அதன்வழி சென்று
கெட்டு மகாபாவம் வேண்டாம்..

வாழ்வில் தோல்வி
உன்னையும் உலுக்கும்
அதனால் சோர்ந்து
நீயும் அலைபாய வேண்டாம்..

சுடர் ஒளியை நீயும் பார்த்து..
நல் இசையும் நீயும் கேட்டு
பிழை வழியை நீயும்
மாற்றி கொள்ளுவாய்..
சுயமறிவதே உந்தன்
மகாசக்தி..

உன் மகாசக்தி..
மகாசக்தி..

அறிவை நீயும்
கூராய் தீட்ட
ஒன்று சேரடா
நண்பா.. ஹேய்.. ஆஹ்..

பின்னல் போலவே
காலை சுற்றிடும்
தடையை நொறுங்கிடு
தெம்பா..

மகிமை கொண்டு
மகுடம் சூட்டிட
எட்டு வையடா
வீரா..

வீரா.. வீரா..
ஆகிடு .. தீயா..
வீரா.. வீரா..
ஆகிடு .. தீயா..

ஓ.. தீய சக்தி
தீண்டா யுத்தி
தாங்கி நில்லு
நீ தான் சக்தி..

துஷ்டனோடு
போட்டி.. போட்டி..
துணிந்து நில்லு
நீ தான் சக்தி..

துணிவோடு..
முன்னே
சென்றிடு நீ..

துணிவோடு
முன்னே
சென்றிடு நீ..

துணிவோடு
முன்னே
சென்றிடு நீ..

மகாசக்தி.. மகாசக்தி.. மகாசக்தி..









No comments: